கர்நாடகத்தில் டிசம்பர் வரை பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைப்பு: அமைச்சரவையில் முடிவு
கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை டிசம்பர் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை டிசம்பர் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறியதாவது,
கரோனா பரவல் காரணமாக பஞ்சாயத்து, தாலுக்கா உள்ளிட்ட தேர்தல்களை டிசம்பர் மாதம் வரை நடத்த வேண்டாம் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், தேர்தல் நடத்துவது குறித்து டிசம்பர் மாதத்திற்கு பிறகு ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.