முகப்பு
இந்தியா

7 மாதத்தில் 78 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - காஷ்மீர் ஐஜி தகவல்

2021ஆம் ஆண்டில் இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். கடந்த சில மாதங்களாகவே துப்பாக்குச்சூடு சம்பவங்கள் குறைந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் இதுவரை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  இதுவரை 78 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

நடைபெற்ற துப்பாக்குச்சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் (39) லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். ஹிஸ்புல் முஜாஹிதின், ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்" என்றார்.  

முழு கட்டுரையைப் படிக்க →