முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 41,157 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,157 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,157 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 42,004 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,02,69,796 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 97.31 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 4,22,660 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.36 சதவிகிதம்.
 
நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் வாராந்திர விகிதம் தொடர்நது 5 சதவிகிதத்துக்கும் கீழ் நீடித்து 2.08 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் தொடர்ந்து 27 நாள்களாக 3 சதவகிதத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது 2.13 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தடுப்பூசி:

நாட்டில் இதுவரை மொத்தம் 40.49 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.