இந்தியா

மும்பை சுவர் இடிந்து விழுந்த சம்பவம்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

DIN


மும்பை செம்பூரிலுள்ள பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவால் குடிசை வீடுகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மும்பையில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக செம்பூர் பாரத் நகர் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சுவர் இடிந்து குடிசை வீடுகள் மீது விழுந்தது. இதில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

முன்னதாக, மீட்புப் பணியிலிருந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 16 பேர் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT