ராஜஸ்தானில் நிலநடுக்கம்
இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி , புதன்கிழமை காலை 5.24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பிகானிர் பகுதியில் 110 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு சில மணி நேரத்திற்கு முன் மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.