இந்தியா

ராஜஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

DIN

இன்று காலை ராஜஸ்தான் மாநிலம்  பிகானிர் பகுதியில் மீண்டும்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து புவியியல் ஆய்வு மையம் தெரிவித்த  தகவலின் படி , இன்று  காலை 7.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம்  பிகானிர் பகுதியில் 110 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும்  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு முன் நேற்றும் அங்கு நிலநடுக்கம் வந்து  ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில்  பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 


புதன் கிழமை   மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில்   நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் புவியியல் மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிலநடுக்கம் தொடர்பான  பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT