இந்தியா

அமைச்சரின் அறிக்கையை கிழித்தெறிந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.

மத்திய அமைச்சர் வைத்திருந்த பெகாசஸ் விவகாரம் குறித்த அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் எம்பி பிடிங்கி கிழித்தெறிந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN


மத்திய அமைச்சர் வைத்திருந்த பெகாசஸ் விவகாரம் குறித்த அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கிழித்தெறிந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெகாசஸ், டைனிக் பாஸ்கர் செய்தி நிறவனத்தில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனை ஆகிய விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச முன்வந்தார்.

அப்போது, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் அமைச்சரிடமிருந்த அறிக்கையைப் பிடுங்கி கிழித்தெறிந்தார்.

இதனால், அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் வெடித்தது.

பின்னர், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT