முகப்பு
இந்தியா

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வடக்கு காஷ்மீரின் சோபோர் பகுதியில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள்  பதுங்கியிருந்த தகவலை உறுதிசெய்தனர் . 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பகிர்:

 வடக்கு காஷ்மீரின் சோபோர் பகுதியில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப்  படையினர் நடத்திய சோதனையில் தீவிரவாதிகள்  பதுங்கியிருந்த தகவலை உறுதிசெய்தனர் . 

பின் காவல் மற்றும் பாதுகாப்புப்  படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். இதில்  பதுங்கியிருந்த   இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் .

இதுகுறித்து காவல்துறைத்  தலைவர்  விஜயகுமார் அளித்த தகவலின் படி , ' தொடர்ந்து வடக்கு காஷ்மீரில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வந்த பயாஸ் வார் என்பவனும் இந்தத் தாக்குதலில் உரிழந்ததாகவும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அறையில் சில துப்பாக்கிகளும், தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது ' எனக் கூறிய பின்  காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →