முகப்பு
இந்தியா

நாடாளுமன்றம் முடக்கம்: ரூ. 133 கோடிக்கும் மேல் இழப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், அமளியால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதனால் வரி செலுத்துவோரின் பணத்தில் ரூ. 133 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:


நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், அமளியால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதனால் வரி செலுத்துவோரின் பணத்தில் ரூ. 133 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

பெகாஸஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே நிலவி வரும் பிரச்னையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குறைந்த பணி நாட்களே செயல்பட்டுள்ளன. பெகாஸஸ் குறித்து விவாதம் நடத்தக்கோரியும் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மத்திய அரசோ இந்தக் கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

இதுகுறித்து அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பது:

"தொடர் அமளியால் 54 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மக்களவை 7 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. 53 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய மாநிலங்களவை 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. ஆக மொத்தம் 107 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டிய நாடாளுமன்றம் வெறும் 18 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. 89 மணி நேர பணி நேரம் வீணாகியுள்ளது.

இதனால், ஒட்டுமொத்தமாக வரி செலுத்துவோரின் பணத்தில் ரூ. 133 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது."

முழு கட்டுரையைப் படிக்க →