சவூதிக்குச் செல்லவும்..! மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்
சவூதிக்கு விமான சேவை: மேற்காசிய நாடுகளில் உள்ள நேபாள மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தல்!
மேற்காசிய நாடுகளில் உள்ள நேபாள மக்களை தாயகம் அழைத்து வர அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, வளைகுடாவில் ஈரான் தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள நேபாள மக்களை சவூதிக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்கு விமானங்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையைப் பயன்படுத்தி ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நேபாள மக்கள் சவூதிக்குச் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படிச் செல்ல விரும்புவோருக்கு சவூதி விசாக்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாயகம் திரும்பும் நேபாள மக்கள், நேபாளத்துக்கான விமான சேவை இல்லாவிட்டால் சவூதிக்குச் செல்லலாம் என்றும் அதன்பின், அங்கிருந்து நேபாளம் திரும்ப திட்டமிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.