முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

உ.பி.யில் 300 இடங்களில் பாஜக வெல்லும்: துணை முதல்வர்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவைச் சந்தித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.

இந்தியா

உ.பி.யில் 300 இடங்களில் பாஜக வெல்லும்: துணை முதல்வர்

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவைச் சந்தித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
கோப்புப்படம்
பகிர்:


உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவைச் சந்தித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

கட்சியின் அமைப்பு குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்புக்குப் பிறகு மௌரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

"கட்சியின் அமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2022-இல் வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பெறவுள்ளோம். இந்த முறையும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம். கட்சித் தொண்டர்கள் மக்களைச் சென்றடைவது பற்றியும் ஆலோசனை நடத்தினோம்" என்றார் அவர்.

கட்சிப் பணிகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங்குடன் இணைந்து மூத்த தலைவர்களை பி.எல். சந்தோஷ் சந்தித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →