ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஆர்னியா பகுதிக்கு அருகே, புதன்கிழமை காலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி, பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர். சில நிமிடங்க இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி ஒப்பந்தமான பிறகு, பாகிஸ்தான் நடத்தும் இரண்டாவது அத்துமீறல் நடவடிக்கை இதுவாகும்.