12 வகுப்பு மாநில அரசுகளின் தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும்: அகிலேஷ் யாதவ்
12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் போன்று 12-ம் வகுப்பு மாநில அரசுகளின் தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை கூறியுள்ளார்.
12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் போன்று 12-ம் வகுப்பு மாநில அரசுகளின் தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை கூறியுள்ளார்.
கரோனா தொற்று நாட்டில் கடுமையாகப் பரவிவருவதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று கூறியுள்ளார். இது மாணவர்களின் நலனுக்காகவும், மாணவர்கள், பெற்றோர்களின் பதட்டத்தை போக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கோரினார்.
இதுகுறித்து யாதவ் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
Advertisement
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் போன்று 12-ம் வகுப்பு மாநில அரசுகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்தியில் அவர் பதிவிட்டுள்ளார்.
தேர்வுகள் ரத்து செய்யப்படுவது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும், 12-ம் வகுப்பு மாநில அரசு தேர்வுகள் குறித்து முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.