சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருப்பதாக துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சுமார் 26,09,501 பேர் தேர்வெழுதவிருந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உத்தரப்பிரதேசத்தில் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றன.
ஏற்கனவே குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.