ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்  
இந்தியா

குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்

'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகியகால கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்  தெரிவித்துள்ளார். 

DIN


'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகியகால கடனுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ்  தெரிவித்துள்ளார். 

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கைக் குழு கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்தார். 

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும், இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் கூறியுள்ளார். 

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கையில் தானியங்கி ஓட்டுநா் தோ்வுத் தளம் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!

துா்க்மேன் கேட் வன்முறை: குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கு பிணை - தில்லி நீதிமன்றம் உத்தரவு

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT