மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,659 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,659 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 13,659 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 13,659 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 58,19,224 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 21,776 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 55,28,834 பேர் குணமடைந்துள்ளனர். 300 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
மாநிலத்தில் இறப்பு விகிதம் 1.71 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 95.01 சதவிகிதமாக உள்ளது.