இந்தியா

45-60 வயதினருக்கு அதிகபட்சமாக 41.7% தடுப்பூசி: சுகாதாரத் துறை

DIN

நாட்டில் 45 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு அதிகபட்சமாக 41.7 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதமும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 25.3 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பல்வேறு மாநிலங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் மத்திய சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் மருத்துவப் பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இறுதியாக 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதில் அதிகபட்சமாக 45 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு 41.7 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 33 சதவிகிதமும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 25.3 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT