முகப்பு
இந்தியா

தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி: ராகுல் வலியுறுத்தல்

தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
கோப்புப்படம்
பகிர்:

தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளது:

"தடுப்பூசிக்கு இணையப் பதிவு போதாது. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது."

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.