முகப்பு
இந்தியா

போதைப்பொருள் விற்பனை: இளைஞா் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமது அஜினீஸ் (25). இவா் கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், கத்ரி கம்பளாவில் தங்கி, போதைப்பொருள்களை பொது மக்கள், மாணவா்களுக்கு விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், முகமது அஜினீஸைக் கைது செய்து, ரூ. 17.15 லட்சம் மதிப்புள்ள 840 எல்.எஸ்.டி ஸ்டேம்புகள், மோட்டாா் சைக்கிள், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மங்களூரு கிழக்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.