இந்தியா

பிரபல பொருளாதார வல்லுநர் பேராசிரியர் ராதாமோகன் மறைவு:  பிரதமர் மோடி இரங்கல்

பிரபல பொருளாதார வல்லுநரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பேராசிரியர் ராதாமோகன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

புதுதில்லி: பிரபல பொருளாதார வல்லுநரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பேராசிரியர் ராதாமோகன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "பேராசிரியர் ராதாமோகன் அவர்கள், விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். குறிப்பாக. நிலையான மற்றும் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றியவர்.

பொருளாதாரம் மற்றும் சூழலியல் தொடர்பான பாடங்களில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அறிவுக்காக மதிக்கப்பட்டார். அவரது மறைவை அறிந்து துயரமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? - முதல்வர் ஸ்டாலின்

வாளையாறு அருகே ரயில் மோதி குட்டி யானை பலி: ஏஐ கண்காணிப்பை மீறி விபத்து!

லிபியா சர்வாதிகார அதிபர் கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை!

ஜொலிக்கும் தங்கம் விலை! இருளில் பொற்கொல்லர் வாழ்க்கை!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,040 உயர்வு.. வெள்ளியும் கிலோ ரூ. 20,000 உயர்ந்தது!

SCROLL FOR NEXT