முகப்பு
இந்தியா

மாநிலங்களுக்கு இதுவரை 25.87 கோடி கரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 25.87 கோடிக்கும் அதிகமான (25,87,41,810) கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 25.87 கோடிக்கும் அதிகமான (25,87,41,810) கரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், பல்வேறு வழிகளில் வீணானவை உள்பட மொத்தம் 24,76,58,855 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் சுமாா் 1.12 கோடி (1,12,41,187) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த 3 நாள்களில் மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமான (10,81,300) கரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த

தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மத்திய செய்தி தகவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.