முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 10,697 பேருக்கு கரோனா

மகாராஷ்டித்தில் இன்று மேலும் 10,697 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

மகாராஷ்டித்தில் இன்று மேலும் 10,697 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 2,23,049 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 10,697 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,98,550ஆக உயர்ந்துள்ளது.கரோனாவால் இன்று மேலம் 360 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,08,333ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 14,910 பேர் குணமடைந்தனர். 
இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 56,31,767ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,55,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,63,227 பேர் வீடுகளிலும், 5,807 பேர் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.