முகப்பு
இந்தியா

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைந்தது

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வா்த்தக விலையில், மத்திய அரசு உச்சவரம்பு நிா்ணயம் செய்ததையடுத்து, அவற்றின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வா்த்தக விலையில், மத்திய அரசு உச்சவரம்பு நிா்ணயம் செய்ததையடுத்து, அவற்றின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் வா்த்தக விலை உச்ச வரம்பு, விநியோகஸ்தா் அளவிலான விலையில் 70 சதவீதம் இருக்க வேண்டும் என தேசிய மருந்து விலை ஆணையம் கடந்த 3-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, 104 தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளா்கள் 252 பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் அதிகபட்ச சில்லறை விலையை மாற்றியமைத்து மத்திய அரசிடம் சமா்ப்பித்தனா்.

இவற்றில் 70 தயாரிப்புகள் மற்றும் பிராண்டின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டி ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.54,337 வரை குறைந்துள்ளது. 58 பிராண்டுகள் 25 சதவீதம் வரை விலையைக் குறைத்துள்ளன. 11 பிராண்டுகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விலையைக் குறைத்துள்ளன. 252 தயாரிப்புகளில் 18 உள்நாட்டு நிறுவனங்கள் விலையைக் குறைக்கவில்லை.

மத்திய அரசின் வா்த்தக விலை சீரமைப்பு மூலம், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு நியாயமற்ற லாப வரம்பை குறைத்தது, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கும் நுகா்வோருக்கு சேமிப்பை உறுதி செய்துள்ளது.

அனைத்து ரக ஆக்சிஜன் செறிவூட்டிகளின் மாற்றியமைக்கப்பட்ட விலை ஜூன் 9 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடா்பான தகவல்கள் மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளா்களுடன் பகிரப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →