முகப்பு
இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேர் கரோனாவுக்கு பலி

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேர் பலியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
கோப்புப்படம்
பகிர்:


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேர் பலியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 80,834 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,94,39,989 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,32,062 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3,303 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 2,80,43,446 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,70,384 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 10,26,159 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 25,31,95,048 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.