முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் புதிதாக 1280 பேருக்கு கரோனா: 15 பேர் பலி 

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
தெலங்கானாவில் புதிதாக 1280 பேருக்கு கரோனா
பகிர்:

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,03,369 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது  21,137 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில்  2,261 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,78,748-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,484 -ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.