திருப்பதி ஏழுமலையான் 
இந்தியா

திருமலையில் மலைப் பாதையில் 20 மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கம்: தேவஸ்தானம் நடவடிக்கை

திருமலை மலைப்பாதையில் விரைவில் 20 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN

திருப்பதி: திருமலை மலைப்பாதையில் விரைவில் 20 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த மலைப்பாதையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

இதற்கான சோதனை ஓட்டம் திருமலை மலைப்பாதையில் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியிலும் பேட்டரியை சாா்ஜ் செய்யும் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல்முறையாக மலைப்பாதையில் 20 மின்சாரப் பேருந்துகளும், பாபவிநாசம் மாா்க்கத்தில் 8 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கரோனா தொற்று தடுப்பு பகுதி நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டவுடன் மின்சாரப் பேருந்துகளை திருமலை மலைப்பாதையில் இயக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT