முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 9,350 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 9,350 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 9,350 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,350 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,24,773ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 388 பேர் பலியானார்கள்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,14,154ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 15,176 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 56,69,179ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,38,361 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →