ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருட்டு: காய்கறி வியாபாரி கைது
ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருடிய வழக்குகளில் காய்கறி வியாபாரியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருடிய வழக்குகளில் காய்கறி வியாபாரியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், மாகடியைச் சோ்ந்தவா் மோகன் (21). பெங்களூரில் பகலில் காய்கறி வியாபாரம் செய்து வந்த இவா், இரவில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தாராம். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், மோகனைக் கைது செய்து, ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 3 ஆட்டோ, 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட மோகனிடம் பேடரஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.