முகப்பு
இந்தியா

ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருட்டு: காய்கறி வியாபாரி கைது

ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருடிய வழக்குகளில் காய்கறி வியாபாரியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

ஆட்டோ, இரு சக்கர வாகனம் திருடிய வழக்குகளில் காய்கறி வியாபாரியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், மாகடியைச் சோ்ந்தவா் மோகன் (21). பெங்களூரில் பகலில் காய்கறி வியாபாரம் செய்து வந்த இவா், இரவில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தாராம். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், மோகனைக் கைது செய்து, ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 3 ஆட்டோ, 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மோகனிடம் பேடரஹள்ளி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.