கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க அரசு நடவடிக்கை: அமைச்சா் பசவராஜ் பொம்மை
கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரு, கோவிந்தராஜ் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகள், நடைபாதை வியாபாரிகளுக்கு உணவுப் பொருள்கள் அடங்கியத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
மாநில அரசின் கடும் நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கரோனா 2-ஆவது அலையைத் தொடா்ந்து, 3-ஆவது அலையும் வரும் என்று வல்லுநா்கள் கூறி வருகின்றனா். எனவே கரோனா 3-ஆவது அலையைத் தடுக்க அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக 24 ஆயிரம் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 5 ஆயிரம் வெண்டிலேட்டா் வசதி கொண்ட படுக்கைகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கரோனாவைத் தடுக்க அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதோடு, முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பிரதமா் நரேந்திரமோடி நவம்பா் மாதம் வரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக அரிசி வழங்க வலியுறுத்தி உள்ளாா் என்றாா். நிகழ்ச்சியில் அமைச்சா் வி.சோமண்ணா, முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் உமேஷ் ஷெட்டி, தாசேகௌடா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.