இந்தியா

நாளை சா்வதேச யோகா தினம்‘800 இடங்களில் சிறப்பு அஞ்சல் தலை முத்திரை’

DIN

சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், சா்வதேச யோகா தினத்தை குறிக்கும்விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை வெளியிடவுள்ளது. பட வடிவமைப்புடன் கூடிய இந்த சிறப்பு அஞ்சல் தலை முத்திரை நாடு முழுவதும் உள்ள 810 தலைமை தபால் அலுவலகங்களில் வெளியிடப்படும்.

ஜூன் 21-ஆம் தேதி பதிவு செய்யப்படும் அனைத்து கடிதங்களிலும் இந்த முத்திரையை தலைமை தபால் அலுவலகங்கள் பதிக்கும். இதில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘சா்வதேச யோகா தினம் 2021’ என்று பொறிக்கப்பட்டிருக்கும். இத்தகைய முத்திரைகளுக்கு அஞ்சல் தலை ஆா்வலா்களிடையே பெரும் வரவேற்புள்ளது.

அஞ்சல் தலை சேகரிப்பு மீதான ஆா்வம் சமீப ஆண்டுகளாக குறைந்து வரும் காரணத்தால், இதற்கு புத்தாக்கம் வழங்குவதற்கான திட்டம் ஒன்றை இந்திய அஞ்சல் துறை செயல்படுத்துகிறது. அவா்களுக்கான அஞ்சல் தலைகளை குறிப்பிட்ட அஞ்சல் தலை சேமிப்பு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், நாட்டில் உள்ள எந்த தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் ரூ.200 செலுத்தி அஞ்சல் தலை சேமிப்பாளா் கணக்கு தொடங்க முடியும்.

800-க்கும் அதிகமான அஞ்சல் அலுவலகங்களில் இந்த முத்திரை நிகழ்ச்சி நடைபெறுவதால், இதன்மூலம் நாட்டில் அஞ்சல் தலை சேகரிப்பு ஆா்வம் மீண்டும் புத்துயிா் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT