முகப்பு
இந்தியா

மாநிலங்களின் கையிருப்பில் 3.06 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு

​மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 29.10 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 29.10 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநிலங்கள் நேரடியாகக் கொள்முதல் செய்தது உள்பட மொத்தம் 29,10,54,050 தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வீணானவை உள்பட மொத்தம் 26,10,54,050 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் இன்னும் 3.06 கோடி தடுப்பூசிகள் உள்ளன. அடுத்த 3 நாள்களில் 24,53,080 தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெறவுள்ளன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,10,554 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 27,66,93,572 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.