நாட்டில் புதிதாக 53,256 பேருக்கு கரோனா; 1,422 பேர் பலி
நாட்டில் மொத்த பாதிப்பு 2,99,35,221-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் 1,422 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 21) வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
திங்கள் கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 53,256 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,99,35,221-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 7,02,887 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 1,422 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,88,135-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 78,190 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,88,44,199-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 39,24,07,782 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,88,699 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.