தில்லி சதர் சந்தை 
இந்தியா

தில்லி: கரோனா குறைந்தது; சமூக இடைவெளி மறைந்தது

தில்லியில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழலில், சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளி மறந்து கூட்டம் கூட்டமாக செல்வது மூன்றாம் அலைக்கு வழிவகுக்கும் அபாயம் எழுந்துள்ளது.

DIN

தில்லியில் கரோனா பரவல் குறைந்து வரும் சூழலில், சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளி மறந்து கூட்டம் கூட்டமாக செல்வது மூன்றாம் அலைக்கு வழிவகுக்கும் அபாயம் எழுந்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையால் தில்லியில் நாள்தோறும் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டதையடுத்து கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு கரோனா பரவலை குறைத்துள்ளனர். தற்போது நாள்தோறும் நூறு பேருக்கு குறைவாக தான் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தில்லி சதர் சந்தையில், பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிப்பதையும், முகக்கவசம் அணிவதையும் மறந்து அலட்சியம் காட்டி வருகிறார்கள்.

கரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், தில்லியில் விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டுவது எளிதாக மூன்றாம் அலை பரவும் சூழல் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது

தில்லி, உ.பி.யில் போலீஸாா் அதிரடி சோதனை: ரூ.30 லட்சம் ஹெராயினுடன் 2 போ் கைது!

பீதம்புராவில் 3 மெட்ரோ நிலையங்களின் பெயா் மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு: மாவட்டத்தில் 9,176 போ் எழுதினா்

அரியலூரில் 97% எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT