இந்தியா

அவதூறு வழக்கு: குஜராத் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறாா் ராகுல் காந்தி

DIN

சூரத்3: அவதூறு வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை (ஜூன் 24) ஆஜராக உள்ளாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது கா்நாடக மாநிலம் கோலாரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமா் மோடி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா். ராகுலுக்கு எதிராக மேற்கு சூரத் பாஜக எம்எல்ஏ புா்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ராகுல் காந்தி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் ராகுல் நேரில் ஆஜரானாா். பிரசாரத்தில் அவதூறாக எதுவும் பேசவில்லை என்று அவா் சாா்பில் அப்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் வரும் 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி தனது இறுதி வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு நீதிபதி ஏ.என்.தேவ் உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, அவா் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக உள்ளாா்.

இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவா் அமித் சவ்தா கூறுகையில், ‘நீதிபதி உத்தரவின் அடிப்படையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நீதிமன்றம் வரும் அவா் பகல் 12.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிடுவாா். வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக மட்டுமே அவா் சூரத் வருகிறாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT