முகப்பு
இந்தியா

இரவு 8 மணி வரை 54 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய அரசு

கரோனா புதிய தடுப்பூசி திட்டத்தின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணி வரை 58 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:


கரோனா புதிய தடுப்பூசி திட்டத்தின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணி வரை 58 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மொத்த எண்ணிக்கை 30.72 கோடியைத் தாண்டியுள்ளது.

இதுதவிர 18-44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டதன் தரவுகளும் வெளியாகியுள்ளன. 18-44 வயதினரில் 7,43,45,835 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 15,70,839 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 

இதில் தமிழகத்தில் மட்டும் 42,75,722 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 37,476 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →