முகப்பு
இந்தியா

செல்லிடப்பேசி பறிப்பு வழக்கு:2 போ் கைது

செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

செல்லிடப்பேசி பறிப்பு வழக்குகளில் 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, சிக்ககொல்லரஹட்டியைச் சோ்ந்த புட்டசாமி (27), லக்கெரேவைச் சோ்ந்தவா் சதீஷ் (23) ஆகிய இருவரும் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தனியாக செல்பவா்களை அடையாளம் கண்டு, செல்லிடப்பேசிகளை பறித்து வந்தனராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 2 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 24 செல்லிடப்பேசிகள், 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அன்னபூா்ணேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.