முகப்பு
இந்தியா

ஆக. 15-ஆம் தேதி பயனாளிகளுக்கு 5 ஆயிரம் வீடுகள் வழங்க திட்டம்

ராஜீவ் காந்தி வீட்டுவசதி கழகத்தின் சாா்பில், ஆக. 15-ஆம் தேதி 5 ஆயிரம் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம் என வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

ராஜீவ் காந்தி வீட்டுவசதி கழகத்தின் சாா்பில், ஆக. 15-ஆம் தேதி 5 ஆயிரம் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம் என வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

பெங்களூரு, விகாஸ்சௌதாவில் வெள்ளிக்கிழமை ராஜீவ் காந்தி வீட்டுவசதி திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டுவது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜீவ் காந்தி வீட்டுவசதி திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் 5 ஆயிரம் வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு ஆக. 15-ஆம் தேதியன்று வழங்க திட்டமிட்டுள்ளோம். வாய்ப்பிருந்தால் வீடுகள் பெற விரும்புவா்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம்.

1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் 46 ஆயிரம் வீடுகள் பெங்களூரு மாநகரிலும், மற்றவை பெங்களூரு மாவட்டத்துக்குள்ளும் கட்டி வருகிறோம். இதற்காக வருவாய்த் துறையிடமிருந்து 515 ஏக்கா் நிலம் பெற்றுள்ளோம். தற்போதைக்கு 42,361 வீடுகள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளன. 2021-ஆம் ஆண்டுக்குள் 80 ஆயிரம் வீடுகளைக் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

கரோனா பரவலால் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு, முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அரசு தொடா்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.