இந்தியா

சரியாக 102 நாள்களுக்குப் பின்.. நாட்டில் 40,000க்கும் குறைவான கரோனா பாதிப்பு

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களில் 907 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,03,16,897 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 3,97,637 உயர்ந்துள்ளது. 

நாட்டில் சுமார் 102 நாள்களுக்குப் பின் இன்று கரோனா பாதிப்பு முதல் முறையாக 40 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5,52,659 ஆகக் குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை 2,93,66,601 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 96.87 சதவீதமாக உள்ளது. 

நாள்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் 2.12 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 22 நாள்களாக தொடர்ந்து 5 சதவீதத்துக்குள் இரக்கிறது.

நாட்டில் இன்று காலை நிலவரப்படி 32.90 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT