கம்பம்: தேக்கடி ஏரியில் படகு சவாரியின் போது யானை கரையை கடந்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.
முல்லைப்பெரியாறு அணை தேக்கடி ஏரியில் தற்போது சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு படகு சவாரி, மலையேற்றம், விரைவு படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலாக்களில் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.
தேக்கடி ஏரியில் படகு சவாரியின் போது கரையை கடக்கும் யானை.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் தேக்கடி ஏரியில் படகு சவாரியின் போது மூன்று படகுகளுக்கு இடையே காட்டு யானை எடப்பாலம் தங்கும் விடுதி அருகே உள்ள கரையில் இருந்து எதிரே உள்ள கரைக்கு ஏரி நீரில் நீந்தி வந்தது, சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சுற்றுலா பயணிகள் வீடியோ மற்றும் புகைப்படங்களை தாங்கள் கொண்டு சென்ற செல்லிடப்பேசிகளில் எடுத்து சமூக வளை தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.