முகப்பு
இந்தியா

ஸ்வீடனில் கத்திக்குத்து தாக்குதல்: 8 பேர் காயம்

ஸ்வீடனில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
கோப்புப்படம்
பகிர்:

ஸ்வீடனில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். 
ஸ்வீடன் நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள வெட்லண்டா பகுதியில் நேற்று பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். 
தகவல்அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ஜான்கோபிங் காவல்துறையினர் மர்ம நபர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் காயமடைந்தார். 
பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →