முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மேற்கு வங்க ஆளுநர்

மேற்கு வங்க ஆளுநர் ஜனதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் முதல் கரோனா தடுப்பூசியை இன்று காலை செலுத்திக்கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 11 மார்ச், 2021 at 1:25 PM
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மேற்கு வங்க ஆளுநர்
பகிர்:

மேற்கு வங்க ஆளுநர் ஜனதீப் தங்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் முதல் கரோனா தடுப்பூசியை இன்று காலை செலுத்திக்கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அலிபூரில் உள்ள கம்மன்ட் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் ஆளுநர் மற்றும் அவரது மனைவியும் கரோனா தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டனர். 

இருவரும் தற்போது நலமாக உள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்திய பின்பு கம்மன்ட் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.