கரோனா: தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 85.91% புதிய பாதிப்பு
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 85.91% கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 85.91% கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கரோனா
தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளில் 85.91 சதவீதம் இந்த மாநிலங்களில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22,854 புதிய
பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 13,659 நபர்களும் (அன்றாட புதிய பாதிப்புகளில் சுமார் 60%), கேரளத்தில் 2,475 பேரும், பஞ்சாபில் 1,393 பேரும், புதிதாக
தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் 671 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,89,226 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.68
சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா காரணமாக 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.