தாமரையுடன் இலையும் சேர்ந்து மலரும்: பியூஸ் கோயல்
மதுரை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
தாமரை மலரும் அதனுடன் இரட்டை இலையும் சேர்ந்து மலரும் என மதுரை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,
மயிலாப்பூர் சட்டப்பேரவை வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் மனு தாக்கல் செய்த பொழுது மழை பெய்து வருண பகவானும் வாழ்த்தி உள்ளார். தாமரை மலரும் அதன் உடன் இரட்டை இலையும் சேர்ந்து மலரும்.
Advertisement
Advertisement
ஊழல் மிக்க குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சென்னை மக்களுக்கும் மயிலாப்பூர் மக்களுக்கும் திமுக எதுவும் செய்யவில்லை.
தமிழகத்தில் போதை புழக்கம் அதிகமாக உள்ளது. அம்மா ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் சிறப்பாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. நிச்சயம் மயிலாப்பூர் மக்கள் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிப்பார்கள்.
வேளச்சேரியில் அதிமுக வேட்பாளர் அசோக் குமார் ஆகியோருக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தினமும் திமுகவினர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். பிரதமர் பயணம் குறித்து தவறான தகவல்களை திமுக பரப்பினர். பிரதமர் சாலை வலம் ரத்து என சொன்னார்கள் நான் வெளிப்படையாகச் சவால் விடுகிறேன் முதல்வர் ஸ்டாலின் அதற்கு ஆதாரங்கள் காட்டுங்கள். பிரதமர் சாலை வலம் இரண்டு வாரம் முன்பே பணிகள் நடக்கும்.
மும்மொழி கொள்கையில் தவறான தகவல் பரப்புகிறார்கள். முதல்வரும் துணை முதல்வரும் தொடர்ந்து அவதூறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
அடுத்த உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கிடையாது எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்.
தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் என எங்குச் சொல்லப்பட்டுள்ளது என முதல்வர் கூற வேண்டும். நான் அவருக்கு நேரடி சவாலாகச் சொல்கிறேன். தமிழைப் படிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் கூறியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.