“குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” - திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக !
திமுக அரசின் ஊழல் பட்டியலை மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வெளியிட்டதைப் பற்றி...
“குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” என்ற தலைப்பில் திமுக அரசின் ஊழல் பட்டியலை மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வெளியிட்டார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று மாலை தமிழகம் வந்தார்.
சென்னை கமலாலயத்தில் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், “குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” என்ற தலைப்பில் திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற திமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எதிராக நடந்த கொடூர குற்றங்கள், தமிழக மண்ணை போதை கலாசாரத்தின் மூலம் சீரழித்த செயல்கள் குறித்து விரிவாக பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.
தமிழகத்தை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிய இந்த ஆட்சியின் செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது.
திமுக ஆட்சியின் செயல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வைப் பெற, இந்த குற்றப்பத்திரிகை முக்கிய ஆதாரமாக அமைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Union Minister and Tamil Nadu BJP Election In-charge Piyush Goyal released a list of corruption allegations against the DMK government, titled “The Stalin Government in the Dock.”
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.