இந்தியா

ஆக்ரா சாலை விபத்தில் 9 பேர் பலி

PTI


நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று டிராக்டருடன் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து காலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த எஸ்யுவி வாகனம், சாலையைக் கடக்கும் போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் டிராலி மீது மோதியது. இதில் எஸ்யுவி வாகனத்தில் வந்த 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 9 பேர் உயிரிழந்துவிட்டனர். 

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT