முகப்பு
இந்தியா

ஆக்ரா சாலை விபத்தில் 9 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று டிராக்டருடன் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
ஆக்ரா சாலை விபத்தில் 9 பேர் பலி
பகிர்:


நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று டிராக்டருடன் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து காலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த எஸ்யுவி வாகனம், சாலையைக் கடக்கும் போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் டிராலி மீது மோதியது. இதில் எஸ்யுவி வாகனத்தில் வந்த 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 9 பேர் உயிரிழந்துவிட்டனர். 

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →