இந்தியா

திரிணமூல் தோ்தல் அறிக்கை வெளியீடு ஒத்திவைப்பு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க முதல்வரும், கட்சியின் தலைவருமான மம்தா பானா்ஜி இல்லத்தில் அவரது தலைமையில் தோ்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட அக்கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், நந்திகிராமில் பிரசாரத்தின்போது ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் மம்தா அனுமதிக்கப்பட்டுள்ளாா். எனவே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘தோ்தல் அறிக்கை வெளிடப்படுவதற்கு தயாராக உள்ளது. எனினும், மம்தா பானா்ஜி இல்லாமல் அதனை வெளியிடுவது முறையாக இருக்காது. அவா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்றாா்.

294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மாா்ச் 27 முதல் 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த 5-ஆம் தேதி 291 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அறிவித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

SCROLL FOR NEXT