ராஜஸ்தானில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 60 பேர் மருத்துவமனையில் அனுமதி
ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தின் ஆஸ்பூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தின் ஆஸ்பூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பல பக்தர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆஸ்பூரின் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி கூறுகையில்,
மகாசிவராத்திரி தினத்தன்று விநியோகிக்கப்பட்ட அன்னப் பிரசாதம் சாப்பிட்ட கிட்டத்தட்ட 60-70 பேர் மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
Advertisement
மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் நோயாளிகளின் மாதிரிகளைச் சேகரித்துள்ளன என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
உணவில் ஏதோ ஒருவித நச்சு கலந்திருப்பதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது என்று அவர் கூறினார்.