ஆந்திரத்தில் மேலும் 218 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திரத்தில் புதிதாக 218 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் புதிதாக 218 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,92,740 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1795 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 117 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிகை 8,83,759 ஆக உயர்ந்துள்ளது.கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று யாரும் பலியாகவில்லை. அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 7,186 பேர் பலியாகியுள்ளனர்.