முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத்

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத்
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், மத்தியப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.