முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று புதிதாக 1,899 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று புதிதாக 1,899 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:47 PM
பகிர்:

கேரளத்தில் இன்று புதிதாக 1,899 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,899 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10.98 லட்சமாக அதிகரித்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 15 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 4,450ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,119 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,68,378ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது 25,158 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,31,924 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 353 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இதுவரை 1.25 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments